குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையை கர்ப்ப காலத்திலையே வராமல் தடுக்க முடியுமா?

Deepthi Jammi
3 Min Read

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை (Newborn Jaundice in Tamil) என்பது அதிகப்படியான பிலிரூபின் காரணமாக குழந்தையின் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாருவதாகும்

பொதுவாக குழந்தை பிறந்த பிறகு தான், அதன் பிலிரூபின் அளவு (Bilirubin Levels) எவ்வளவு இருக்கு என்பதை தெரிந்து கொள்ள முடியும், பிலிரூபின் அளவு என்பது மஞ்சள் காமாலை, குழந்தையின் இரத்தத்தில் எவ்வளவு அளவு பரவி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுவதாகும்.

குழந்தைக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை வகைகள் (Newborn Jaundice in Tamil – Types)

மூன்று வகையான மஞ்சள் காமாலை உள்ளது அவை – பிஸியோ லாஜிக்கல் ஜான்டிஸ் (physiological jaundice), பத்தோ லாஜிக்கல் ஜான்டிஸ் (pathological jaundice), பிரஸ்ட் பீடிங் ஜான்டிஸ் (breastfeeding jaundice).

பிஸியோ லாஜிக்கல் ஜான்டிஸ் (Physiological Jaundice)

புதிதாகப் பிறந்த குழந்தையின் முதிர்ச்சியற்ற கல்லீரல், உள்ள பிலிரூபினை பெரும்பாலும் விரைவாக அகற்ற முடியாது, இதனால் பிலிரூபின் அளவு அதிகமாகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் இந்த சாதாரண நிலை மஞ்சள் காமாலை பிஸியோ லாஜிக்கல் மஞ்சள் காமாலை என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பொதுவாக குழந்தை பிறந்து இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் ஏற்படும்.

பத்தோ லாஜிக்கல் ஜான்டிஸ் (pathological jaundice)

இது குழந்தை பிறந்த பிறகு 24 மணி நேரத்திற்குள் ஏற்படுகிறது , மேலும் குழந்தையின் பிலிரூபின் அளவு விரைவாக உயரும்.

பத்தோ லாஜிக்கல் மஞ்சள் காமாலைக்கான சில காரணங்கள்

  • செயலற்ற தைராய்டு சுரப்பியில் (ஹைப்போ தைராய்டிசம்)
  • தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதது.
  • தாய்க்கும் குழந்தைக்கும் வெவ்வேறு இரத்த வகைகள் இருக்கும்போது, ​​அவை கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின் போது ஒன்று சேர்ந்து, இரத்தப் பொருத்தமின்மை இல்லாமல் இருப்பது
  • அல்லது கல்லீரல் நோயாக இருக்கலாம்.

பிரஸ்ட் பீடிங் ஜான்டிஸ் (breastfeeding jaundice)

குழந்தை பிறந்து இரண்டாவது அல்லது மூன்றாவது  வாரங்களில் இந்த மஞ்சள் காமாலை ஏற்படுகிறது மற்றும் இது பல வாரங்களுக்கு குறையாமல் தொடரலாம். 

உங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காதபோது இது நிகழ்கிறது.

பிறந்த குழந்தைக்கு வரும் மஞ்சள் காமாலை எப்படி சரி செய்வது (Newborn Jaundice in Tamil – Management)

சில சமயம் இந்த மஞ்சள் காமாலை தானாகவே சரி ஆகிவிடும் இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மஞ்சள் காமாலை சரி செய்வதற்கு போட்டோ தெரப்பி (phototherapy for jaundice) மற்றும் லைட் தெரப்பி (light therapy for jaundice) என்ற சிகிசைகள் உள்ளது.

போட்டோ தெரப்பி சிகிக்சை என்பது ஒரு சிறப்பு வகை ஒளியுடன் அதாவது ஊதா நிற ஒளியில் குழந்தையை படுக்க வைக்கும் சிகிச்சையாகும்.

மேலும் உங்கள் குழந்தையின் கல்லீரலை உள்ள பிலிரூபின் அளவை எளிதாக அகற்றும் , மற்றும் குழந்தையின் இரத்தத்தில் இருந்து பிலிரூபினை முழுமையாக அகற்றும். 

லைட் தெரப்பி – குழந்தைகளுக்கு பிலி-லைட் (bili-light) என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகையான ஒளி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உங்கள் குழந்தை பிலி-லைட்கள் கொண்ட படுக்கையில் வைக்கப்படும், லைட்கள் குழந்தையின் தோலில் சரியாக பரவி பிலிரூபினை மாற்றுகின்றன. பின்னர் இந்த மஞ்சள் காமாலை சிறுநீர் அல்லது  மலம் வழியாக குழந்தையின் உடலை விட்டு முழுவதும் வெளியேறும்.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை (Newborn Jaundice in Tamil) வராமல் கர்பத்திலேயே தடுக்க முடியுமா?

ஒரு குழந்தை பிறந்த பிறகு வரும் மஞ்சள் காமாலையை, அந்த குழந்தை கருவில் இருக்கும் போது கர்ப்பத்தில் வளரும் போது மருந்துகள் கொடுத்து வராமல் தடுக்க முடியுமா என்றால் அது முடியாது என்பது தான் இதற்கு பதில். 

குழந்தை கருவில் வளரும்போது மஞ்சள் காமாலை வராமல் தடுப்பது என்பது நம்மளால் செய்யமுடியாத ஒன்று. குழந்தை பிறந்த பிறகு தான் அந்த பிலிரூபினை சரிசெய்ய முடியும்.

Rate this post

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »