சிசேரியன் பிரசவத்தை பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் (Myths and Facts About Cesarean in Tamil)

Deepthi Jammi
9 Min Read

சிசேரியன் பிரசவத்தை பற்றிய கட்டுக்கதைகள் (Myths and Facts About Cesarean in Tamil)

அறுவை சிகிசை முறையும் கடினமானது மற்றும் சில ஆபத்துகளுடன் வந்தாலும், சிசேரியன் பிரசவத்தை பற்றிய பொதுவாக கட்டுக்கதைகள் (Myths and Facts About Cesarean in Tamil) மற்றும் தவறான எண்ணங்கள் காரணமாக பலவீனமாக கருதப்படுகிறது. இந்த சி – பிரிவு குறித்த பொதுவான கட்டுக்கதைகளை இங்கு பார்க்கலாம்.

Contents
சிசேரியன் பிரசவத்தை பற்றிய கட்டுக்கதைகள் (Myths and Facts About Cesarean in Tamil)சி- பிரிவு முதல் முறை நடந்தால் தொடர்ந்து சி- பிரிவுசி -பிரிவுக்குப் பிறகு உடனே நடக்க முடியாதுசி- பிரிவு பிரசவம் வலியற்றதுசி – பிரிவு பிரசவத்திற்கு பிறகு யோனி இரத்தப்போக்கு உண்டாகாதுசி- பிரிவுகள் அபாயமில்லாதவைசி- பிரிவுகள் செய்தால் ஆபத்து இல்லைசி- பிரிவு சிகிச்சை பிறப்பு பாதுகாப்பற்றதுசி- பிரிவுக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க முடியாதுசி-பிரிவு செய்து கொண்டால் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முடியாதுசி- பிரிவுக்கு பிறகு நடக்கவோ வண்டி ஓட்டவோ முடியாதுசி- பிரிவு பிரசவம் எதிர்பார்த்த நேரத்தில் செய்து கொள்ளலாம்சி-பிரிவு பிரசவம் செய்யும் போது அதிக மருந்துகள் செலுத்தப்படும்சி-பிரிவு தையல் எப்போது வேண்டுமனாலும் பிரியலாம்சி-பிரிவு குணமாக நீண்ட காலம் ஆகும்சி-பிரிவு பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வுசி-பிரிவு குழந்தை தாய் ஆரோக்கியம் கெடும்

சி- பிரிவு முதல் முறை நடந்தால் தொடர்ந்து சி- பிரிவு

முதல் பிரசவம் சி- பிரிவில் என்றால் அடுத்த முறையும் சி- பிரிவு தான் என்பது முற்றிலும் உண்மையா? இது முற்றிலும் உண்மை இல்லை. முதல் பிரசவத்தின் போது சி – பிரிவு மூலம் பிரசவித்த பெண்கள் பல்வேறு பெண்கள் உள்ளனர். மேலும், இரண்டாவது முறையாக அவர்களுக்கு நார்மல் டெலிவரி ஆகலாம்.

அதன் பக்கவிளைவுகள் பற்றி நாம் பேசினால், சாதாரண பிரசவத்தின் போது இரண்டாவது முறை வடு முறிவு உண்டாகலாம். உங்களுக்கு சி – பிரிவு பிரசவம் இருந்தால் அடுத்த கர்ப்பத்திற்கு முன்பு மருத்துவரை அணுகுங்கள்.

சீரான இடைவெளியில் கருத்தரித்து மருத்துவரின் அறிவுரையோடு உணவு முறை, வாழ்க்கை முறை போன்றவற்றை கடைப்பிடித்தால் இரண்டாவது பிரசவம் சுகப்பிரசவமாக வாய்ப்புண்டு. அதனால் ஒரு முறை சி-பிரிவு என்றால் ஒவ்வொரு முறையும் சி – பிரிவுதான் என்பதை நம்ப வேண்டாம்.

சி -பிரிவுக்குப் பிறகு உடனே நடக்க முடியாது

சி- பிரிவுக்கு பிறகு வலியை உணர்ந்தாலும், சில நாட்களுக்கு உங்களால் நடக்ககூட முடியாத அளவுக்கு வலி பலவீனமாகாமல் இருக்காது. நீண்ட தூரம் நடப்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால் வீட்டுக்குள் நடப்பது சிரமமாக இருக்காது. ஆனால் நடக்கும் போது பலவீனத்தை உணர்ந்தால் சிறிது நேரம் ஓய்வெடுத்து பிறகு நடக்கலாம்.

சி-பிரிவு பெண்கள் சில வாரங்களுக்கு பிறகு உடற்பயிற்சியை கூட செய்யலாம். கர்ப்பத்துக்கு முன்பிருந்து உடற்பயிற்சி செய்தவர்கள் சி-பிரிவுக்குப் பிறகு உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையோடு மருத்துவர் அனுமதியுடன் மென்மையான சில உடற்பயிற்சிகளே செய்யலாம். செய்தும் வருகிறார்கள். அதனால் சி-பிரிவு செய்த பிறகு நீண்ட காலம் நடக்க முடியாது என்பது வதந்தியே.

சி- பிரிவு பிரசவம் வலியற்றது

சிசேரியன் பிரசவம் எப்போதும் வலி இல்லாதது என்று நினைக்கிறார்கள். சுகப்பிரசவ காலத்தில் வலியானது அதிகமாக இருக்கும். ஆனால் சிசேரியன் காலம் எந்த வலியையும் உண்டாக்காது என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். உண்மையில் சுகப்பிரசவம் என்பது பிரசவ நேரம் வரை வலியை கொண்டிருக்கும். பிறகு வலி இருக்காது.

ஆனால் சிசேரியன் பிரசவம் என்பது மயக்க மருந்தினால் வலியை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் மயக்க உணர்வுக்கு பிறகு நீங்கள் வலியை எதிர்கொள்வீர்கள் இது குறைந்தது 10 நாட்களுக்கு இருக்கும்.

சுகப்பிரசவத்திற்கு பிறகும் கருப்பை சுருங்குவதில் வலி உணர்வு இருக்கும். அதனால் எந்த வகை பிரசவத்திலும் வலியை எதிர்கொள்வீர்கள்.

சி – பிரிவு பிரசவத்திற்கு பிறகு யோனி இரத்தப்போக்கு உண்டாகாது

பிரசவத்துக்கு பிறகு இரத்தப்போக்கு உண்டாகும். ஆனால் சிசேரியன் பிரசவத்துக்கு பிறகும் பெண்களுக்கு பெண் உறுப்பு வழியாக இரத்தப்போக்கு உண்டாகலாம். அது குழந்தையின் பிறப்பு காரணமாக யோனி பகுதியில் இரத்தப்போக்கு வருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் நஞ்சுக்கொடி பிரித்தலில் இருந்து கருப்பை குணமடைந்து வழக்கமான நிலைக்கு வர முயற்சிப்பதால் யோனி இரத்தப்போக்கு உண்டாகக்கூடும்.

சுகப்பிரசவத்துக்கு பிறகும், சி-பிரிவு பிரசவத்துக்கு பிறகும் இரத்தப்போக்கு உண்டாகும். தீவிரமான இரத்தப்போக்கு நீண்ட காலம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

சி- பிரிவுகள் அபாயமில்லாதவை

யோனி சுவர்கள் தளர்வானதாக இருக்கும் போது யோனி ப்ரோலாப்ஸ் என்பது ஒரு நிலை. சுற்றியுள்ள கருப்பை, மலக்குடல், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுகுடல் ஆகியவை அவற்றின் இயல்பான நிலைகளிலிருந்து வெளியேற தொடங்குகின்றன. ஏனெனில் யோனி சுவர் இனி அவற்றை தாங்க முடியாது. எனினும் பிறப்புறுப்பு அல்லது சிசேரியன் என்று எதுவாக இருந்தாலும் இந்த நிலை ஆபத்தானது தான்.

சி- பிரிவுகள் செய்தால் ஆபத்து இல்லை

ஒரு பெண்ணுக்கு பல சி- பிரிவுகள் இருந்தால் அது பெரிய கவலையாகவே மாறும். பொதுவாக 3-4 சிசேரியன்களுக்கு பிறகு ஆபத்து அதிகரிக்கிறது. ஏனெனில் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைகள் நஞ்சுக்கொடியை அனுபவைக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். இது இரத்த நாளங்கள் மற்றும் நஞ்சுக்கொடி அனுபவிக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

இது இரத்த நாளங்கள் மற்றும் நஞ்சுக்கொடியின் பிற பகுதிகள் முந்தையை சி- பிரிவு வடு மற்றும் அருகிலுள்ள கட்டமைப்புகள் மூலம் வளரும் போது உண்டாகும் தீவிர கர்ப்ப நிலையாகும். மேலும் பொதுவாக பிரசவத்தின் போது கருப்பை நீக்கம் மற்றும் இரத்தப்போக்கு காரணமாக இரத்தமாற்றம் தேவைப்படுகிறது.

சி- பிரிவு சிகிச்சை பிறப்பு பாதுகாப்பற்றது

சிசேரியன் பிரிவில் பிரசவமானது வயிற்றைக்கிழித்து குழந்தையை வெளியே எடுப்பது சற்று சவால் நிறைந்த விஷயம் இது மிகப்பெரிய ரண சிகிச்சை என்று சொல்லலாம். இந்த சிகிச்சையில் சிறு பிழை உண்டானாலும் அதன் விளைவு பெரியதாக இருக்கும். தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பாதுகாப்பான அறுவை சிகிச்சையை உறுதிப்படுத்துகிறது. இந்த பிரசவம் முற்றிலும் பாதுகாப்பற்றது என்று சொல்ல முடியாது எனினும் இதில் கூடுதல் கவனம் தேவை.

சி- பிரிவுக்குப் பிறகு தாய்ப்பால் கொடுக்க முடியாது

சி- பிரிவுக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்க முடியாது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சிலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொண்டால் தாய்ப்பால் கொடுக்க முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் இது அப்படி இல்லை. உடலில் சில சிரமங்கள் அறுவை சிகிச்சை முடிந்த பின் இருந்தாலும் நாளடைவில் குணமாகி விடுவீர்கள்.

குழந்தையை தூக்குவது பாலூட்டுவது சிரமமாக இருக்கும் என்றாலும் உங்களுக்கு உதவியாளர் ஒருவரை வைத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். குறிப்பாக முதுகுத்தண்டுவடத்தில் மயக்கமருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகும் கூட தாய்ப்பால் பிரசவத்துக்கு பின் உடனடியாக கொடுக்கலாம்.

சி-பிரிவு செய்து கொண்டால் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முடியாது

சி- பிரிவு செய்துகொண்டவர்கள் குழந்தையோடு சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைக்கிறார்கள். குழந்தையிடம் இருக்கும் நெருக்கம் சுகப்பிரசவத்தின் போது மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறார்கள். சிசேரியன் பிரசவத்துக்கு பிறகு குழந்தையை தூக்கி கொஞ்சுவது, மடியில் வைப்பது இயலாத காரியம் என்பதால் நெருக்கமாக இருக்க முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் சி- பிரிவுக்கு பிறகும் குழந்தையை நெருக்கமாக வைத்திருக்கலாம்.

சி- பிரிவுக்கு பிறகு நடக்கவோ வண்டி ஓட்டவோ முடியாது

சி- பிரிவு என்பது வலி தரக்கூடிய செயலாகும். தையல் போட்ட இடத்தில் அழுத்தம் ஏற்பட்டால் அது வலியை உண்டாக்கும். அதனால் முழுமையாக குணமடையும் வரை ஓய்வு தேவை என்று பல காலம் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்தால் நீங்கள் உடலை வருத்திக்கொள்ளாமல் நடக்கவோ அல்லது வாகனம் ஓட்டவோ முடியும். அதனால் சி -பிரிவுக்கு பிறகு எப்போதும் வண்டி ஓட்ட முடியாது என்று நினைக்க வேண்டாம்.

சி- பிரிவு பிரசவம் எதிர்பார்த்த நேரத்தில் செய்து கொள்ளலாம்

இது சரியானது அல்ல. பிரசவத்துக்கு பிறகு சரியான நேரம் வராமல் குழந்தையை வெளியே எடுப்பதோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கு பிறகும் குழந்தையை தள்ளிபிறக்கவைப்பதோ சரியானதல்ல சி-பிரிவு நேரத்தை மருத்துவர்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றாலும் சில சுய அழுத்தம் கொடுப்பதுண்டு. இவை ஆபத்தில் முடியக்கூடும்.

கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரம் வரும் வரை சில முயற்சிகள் செய்யாமல் இருப்பதே நல்லது. பொதுவாக பிரசவ வலி விட்டுவிட்டு வரும். வலியில் தாய் களைப்படையும் போது சற்று ஓய்வு கொடுத்து குழந்தையை வெளி வர செய்ய முயல்வர். சிக்கல் அதிகரிக்கும் போது மட்டுமே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

சி-பிரிவு பிரசவம் செய்யும் போது அதிக மருந்துகள் செலுத்தப்படும்

இது தவறான கருத்து. அறுவை சிகிச்சை செய்யும் போது பெண் பிரசவ வலியை தாங்கி கொள்ளவும், பிரசவத்தின் போது எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் மருந்துகள் தரப்படுகிறது. இந்த மருந்துகளை மருத்துவர் அந்த பெண்ணின் உடல் நிலை, வலியை தாங்கும் சக்தி, தேவையான வீரியம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு சீரான இடைவெளியில் சரியான அளவு மருந்தை உட்செலுத்துவார்கள். அதிக கவனத்தோடு மருத்துவர் தொடர் கண்காணிப்பில் இந்த மருந்துகளை உட்செலுத்துவார்கள் என்பதோடு அதிக மருந்துகள் என்பது வதந்தியே.

சி-பிரிவு தையல் எப்போது வேண்டுமனாலும் பிரியலாம்

பெரும்பாலான பெண்கள் பிரசவம் சிக்கலாகும் நிலையிலும் சி- பிரிவு குறித்து அச்சம் கொண்டிருப்பார்கள். காரணம் சி-பிரிவு நிலையில் அறுவை சிகிச்சையின் போது செய்யப்படும் தையலானது பிரிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கருப்பை முதல் வயிற்றுப்பகுதி வரை கீறல் செய்து பிரசவம் செய்தாலும் அனுபவமிக்க மருத்துவர்கள் சரியான முறையில் நவீன மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள்.

இதனால் தையல் பிரிந்து விட வாய்ப்புகள் இல்லை. சி-பிரிவுக்கு பிறகு தையல் ஆறும் வரை மருத்துவர் அறிவுறுத்தும் விஷயங்களில் கவனமாகவும், மருந்துகளையும் சரியாக எடுத்துகொண்டால் தையல் குறித்து பயப்பட வேண்டியதில்லை.

சி-பிரிவு குணமாக நீண்ட காலம் ஆகும்

சுகப்பிரசவமாக இருந்தால் அவர்கள் எளிதில் மற்ற வேலைகளை செய்ய முடியும். ஆனால் சிசேரியன் செய்துகொண்டவர்களால் சீக்கிரம் எழுந்து நடமாட முடியாது. அவர்கள் குணமடைய நீண்ட காலம் ஆகும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சுகப்பிரசவத்துடன் சி-பிரிவு செய்து கொண்டவர்கள் குணமாக சில காலம் ஆகும் என்றாலும் அவை நீண்ட காலமாக இருக்காது. நிச்சயம் படுக்கையில் இருக்க மாட்டீர்கள்.

சி-பிரிவு பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வு

சி- பிரிவு கொண்டிருப்பவர்கள் மகப்பேறுக்கு பிறகு மனச்சோர்வை பெற முடியாது. பெரும்பாலும் பிரசவத்துக்கு பிறகு வரும் மன அழுத்தம் சி- பிரிவு கொண்டிருப்பவர்களுக்கு தான் வருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் குழந்தை பிறந்த பிறகு அனைவருக்கும் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகிறது.

புதிய அம்மாவாக பல பொறுப்புகளை நிகழ்ந்திருக்கும் நிலையில் பெற்றோர்கள் இருவருக்குமே இந்த மனச்சோர்வு பொதுவானது. சுகப்பிரசவமாக இருந்தாலும் சிசேரியன் பிரசவமாக இருந்தாலும் உங்கள் உணர்ச்சி நிலை ஒன்றாகவே இருக்கும். சி-பிரிவுக்கும் மன அழுத்தத்துக்கும் தொடர்பு இல்லை.

சி-பிரிவு குழந்தை தாய் ஆரோக்கியம் கெடும்

அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை விட பாதுகாப்பு இல்லாதவை. தாய் மற்றும் குழந்தை இருவரது ஆரோக்கியமும் கெட்டுவிடும் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் சுகப்பிரசவம் செய்ய முடியாத நிலையில் தாய் அல்லது குழந்தைக்கு ஆபத்து இருந்தால் மட்டுமே சி – பிரிவு செய்யப்படுகிறது. இதனால் இருவரில் அதாவது தாய் மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பு மட்டுமே.

சி-பிரிவுக்கு பிறகு தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியமாக இருக்க போதுமான ஓய்வும், சத்தான ஆகாரமும் தேவை. இவை எல்லாம் சரியாக இருந்தால் எளிதாக அவர்களை மீட்க முடியும்.

சுகப்பிரசவமாக இருந்தாலும் சி- பிரிவாக இருந்தாலும் எல்லா நிலையிலும் பெண் உடல் உழைப்பு உண்டு. வலி இருவருக்குமே உண்டு. எந்த வகையிலும் சுகப்பிரசவமும் சி-பிரிவும் மற்றொன்றை விட மேலானது அல்ல. அதனால் பிரசவத்தின் முடிவில் குழந்தை – தாய் இருவரது ஆரோக்கியமும் மட்டுமே முக்கியம். சில நேரங்களில் சி -பிரிவு என்பது முன்கூட்டியே திட்டமிடும் நிலையும் கூட. இது உயிர்காக்கும் அவசர அறுவை சிகிச்சையாக செய்யப்படுகிறது.

அதனால் சி-பிரிவு அபாயகரமானது, பாதுகாப்பற்றது என்பது குறித்த கட்டுக்கதைகளை நம்பாமல் உண்மையான யதார்த்தத்தை உணர்வது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்ல சுற்றியிருப்பவர்களுக்கும் பொருந்தும்.

4.9/5 - (108 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »