குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன?

Deepthi Jammi
4 Min Read

குழந்தையின்மை பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை:

கருவுற முடியாமல் இருக்கும் தம்பதியர் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். குழந்தைப்பேறு வேண்டி எந்தவிதமான பாதுகாப்பான முறையும் இல்லாமல் பாதுகாப்பாற்ற உடலுறவு கொள்ளும் தம்பதியர் கருவுறுதலுக்கு உள்ளாக வேண்டும்.

ஒரு வருடம் கடந்த நிலையிலும் கருவுற முயற்சித்து கருவுற முடியாத நிலையில் இருப்பவர்கள் குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள். அதிலும் அந்த பெண் 35 வயதை கடந்தால் அவர்கள் ஆறு மாதங்களுக்குள் கருத்தரிக்க வேண்டும். இல்லையெனில் இத்தகைய பெண்கள் மலட்டுத்தன்மையுடன் இருக்கலாம்.

குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்கலாம் என்றாலும் இந்த பதிவில் பெண்களுக்கு உண்டாகும் குறைபாடு குறித்து பார்க்கலாம்.

அண்டவிடுப்பின் ஏற்படும் பிரச்சனை

பெண்ணின் உடலில் எல்லா பணிகளும் சீராக தடையின்றி நடக்க வேண்டும். ஏனெனில் கருவுறுதல் என்பது பல படிகளை கொண்ட செயல்முறை.

ஒரு பெண்ணின் உடல் அவளது அண்டவிடுப்பை சரியாக செய்ய வேண்டும். அண்டவிடுப்பின் போது முட்டையை வெளியிட வேண்டும். முட்டை கருப்பை நோக்கி ஃபெலோபியன் குழாய் வழியாக செல்ல வேண்டும். பிறகு ஆணின் விந்துமுட்டையுடன் சேர வேண்டும்.

கருவுற்ற முட்டை கர்ப்பப்பையின் உட்புறத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த செயல்பாடுகளில் சிக்கல் இருந்தால் கருவுறாமை உண்டாகும்.

பெண் கருவுறாமைக்கு காரணங்களில் பெரும்பாலானவை அண்டவிடுப்பின் போது உண்டாகும் சிக்கல்களே. அண்டவிடுப்பின் இல்லாமல் கருத்தரிக்க முட்டைகள் இல்லை. அண்டவிடுப்பு இல்லை என்பதை ஒழுங்கற்ற மாதவிடாய் அறிகுறியாக கொள்ளலாம்.

ஹார்மோன் பிரச்சனை

ஹைபோதாலமிக் செயலிழப்பு, பிட்யூட்டரி சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் இரண்டு ஹார்மோன்கள் ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பை தூண்டுவதற்கு காரணங்களாகிறது. பெண்ணின் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இந்த ஹார்மோன் உற்பத்தியை சீர்குலைத்து அண்டவிடுப்பை பாதிக்கும்.

இது பெரும்பாலும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் காரணமாக ஏற்படுகிறது. பி.சி.ஓ.எஸ் என்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை. இது சாதாரண அண்டவிடுப்பின் தலையிடக்கூடும். பெண் கருவுறாமைக்கு முதல் காரணமாக பிசிஒஎஸ் சொல்லப்படுகிறது.

அண்டவிடுப்பின் பிரச்சனைகளில் மற்றொரு காரணம் பெண்ணின் கருப்பைகள் வயது காரணமாக வேலை செய்வதை நிறுத்தும் போது இந்த அண்டவிடுப்பில் சிக்கல் உண்டாகும்.

வேறு காரணங்கள்

இவைதவிர பெண்களின் கருவுறுதல் பிரச்சனைகளுக்கு வேறு காரணங்களாக சொல்லப்படுவது இடுப்பு அழற்சி நோய், எண்டொமெட்ரியோசிஸ், எக்டோபிக் கர்ப்பம், அறுவை சிகிச்சை காரணமாக தடுக்கப்பட்ட ஃபெலோபியன் குழாய்கள், கருப்பையின் உடல் பிரச்சனைகள், கர்ப்பப்பை நார்த்திசுகட்டிகள், கருப்பையின் சுவர்களில் உள்ள திசு என பலவும் இருக்கலாம்.

வாழ்க்கை முறைகள்

ஒரு பெண் கருவுறாமைக்கு அவள் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் மட்டும் இல்லாமல் வாழ்க்கை முறை தவறுகளும் காரணங்களாகிறது.

பெண்ணின் வயது அதிகரிக்கும் போது கருவுற முயற்சிப்பது, அதிகப்படியான ஆல்கஹால் அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பது, எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பது, மோசமான உணவு பழக்கத்தை கொண்டிருப்பது, அதிக அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தடகள பயிற்சி, அதிக எடையுடன் இருப்பது, உடல் எடை பலவீனமாக இருப்பது, பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள், முதன்மை கருப்பை பற்றாக்குறை போன்ற ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் சுகாதார பிரச்சனைகள் எல்லாமே கருவுறாமைக்கு காரணங்களாகிறது.

வயது காரணம்

பெண்கள் தங்களது 23 வயதில் குழந்தை பெற்றுகொள்வதை காட்டிலும் 30 மற்றும் அதற்கு மேற்பட்டு 40 வயது வரை குழந்தைகளை பெற காத்திருக்கிறார்கள். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி குறையகூடும். குறிப்பாக மேலை நாடுகளில் 35 வயதுக்கு பிறகு குழந்தைபெற்றுகொள்பவர்கள் 20% பேர். இது நம் நாட்டிலும் அதிகரித்துவருகிறது. இந்த வயதில் குழந்தைபேறை எதிர்நோக்கும் மூன்று பெண்களில் ஒருவர் இந்த கருவுறாமை பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்.

கருமுட்டை ஆரோக்கியம்

இந்த வயதில் பெண்ணின் கருப்பைகள் முட்டைகளை வெளியிடுவதற்கான திறனை குறைக்கும். குறைந்த எண்ணிக்கையிலான முட்டைகள் வெளியிடும். அப்படி வெளியிடும் முட்டைகள் ஆரோக்கியமானவையாக இருக்காது. கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடிய சுகாதார நிலைமைகள் அதிகம் உண்டாக்கி அவளுக்கு கருச்சிதைவு ஏற்படுத்தும் வாய்ப்பை உண்டாக்கும்.

கர்ப்பப்பை ஏற்படும் கோளாறுகள்

கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பை வாய் காரணங்களாக இருக்க கூடும். கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பை வாய் கருவுறுதலில் தலையிடுவதன் மூலம் கருச்சிதைவு உண்டாகும் வாய்ப்பு உண்டு.

தீங்கற்ற ஃபைப்ராய்டு கட்டிகள் கர்ப்பப்பையில் பொதுவாக இருக்கும். இது ஃபெலோபியன் குழாய்களை தடுக்கலாம். அல்லது கருவை கர்ப்பப்பையில் பொருத்துவதை தடுக்க செய்யலாம். எனினும் கர்ப்பப்பையில் இந்த கட்டிகள் இருந்தால் கருவுறாது என்பதல்ல. பல பெண்கள் கர்ப்பம் அடைகிறார்கள்.

சில பெண்களுக்கு அசாதாரண வடிவில் கர்ப்பப்பை இருக்கும். இதுவும் கருவுறாமை பிரச்சனையை உண்டு செய்யும். வெகு அரிதாக குழந்தைப்பேறின்மைக்கு சரியான காரணத்தை கண்டறியமுடிவதும் இல்லை.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மருத்துவரை சந்திப்பது

குழந்தைப்பேறு பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் எப்போது இதை பிரச்சனையாக அறிந்து மருத்துவரை அணுகுவது என்று தெரிந்துகொள்வோம். அதற்கு முன்பு உங்கள் வயது 35 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீங்கள் ஆறுமாத காலம் முயற்சித்து அதற்கு பிறகு மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஏனெனில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும் குறையக்கூடும். குறிப்பாக 30 வயதுக்கு மேல் இந்த வாய்ப்பு பெருமளவு குறையக்கூடும். மேலும் உடல் நல பிரச்சனைகள் மலட்டுத்தன்மை அபாயத்தை அதிகரிக்ககூடும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால் கண்டிப்பாக குழந்தைப்பேறுக்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது. இளவயதில் திருமணத்துக்கு பின்பு முதல் இரண்டு வருடம் வரை காத்திருக்கலாம். அதன் பிறகு மருத்துவரை சந்திக்கலாம். 30 வயதை அடைந்தவர்கள் ஒரு வருடம் வரை காத்திருந்து பிறகு மருத்துவரை அணுகுவது நல்லது. எனினும் ஆரோக்கியமான கருத்தரிப்புக்கு மருத்துவரின் முன் ஆலோசனை நிச்சயம் உதவும்.

5/5 - (10 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »