வெவ்வேறு வகையான பிரசவ முறைகள் என்ன? (Different Childbirth in Tamil)

Deepthi Jammi
9 Min Read

பிரசவம் என்றால் சுகப்பிரசவம் மட்டும் தான் என்னும் காலத்திலிருந்து மாறியிருக்கிறோம். எனினும் பாதுகாப்பான பிரசவங்களை கையாளும் அளவுக்கு மருத்துவ உலகம் மாறியுள்ளது.

ஒரு பெண்ணின் பிரசவகாலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிவது கடினம். எனினும் தங்களது பிரசவக்காலம் எப்படி இருக்கும் என்னும் திட்டத்தை மனதுக்குள் வைத்திருக்கும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஆரோக்கியமான பிரசவத்துக்கு கர்ப்பகால பராமரிப்புகளில் கூடுதல் அக்கறையோடு இருக்க வேண்டும். வெவ்வேறு வகையான பிரசவ முறைகள் என்ன (Different Childbirth in Tamil), அவை செய்யப்படும் விதம் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பிரசவ முறைகளில் பல வகை உண்டு (Different Childbirth in Tamil) அதில் சிறந்தது எது? ஏன்?

Types of Different Childbirth

பிரசவ முறைகள் பலவும் இருந்தாலும் பாதுகாப்பான மற்றும் மிகவும் பொதுவான பிரசவமாக சொல்லப்படுவது சுகப்பிரசவம் ஆகும். யுனைடெட் ஸ்டேட்ஸில் அனைத்து பிறப்புகளில் சுமார் 68% பிறப்புறுப்பு பிரசவங்கள் தான்.

வெகு அரிதாக தேவையெனில் மட்டுமே சி -பிரிவு பிரசவத்தை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கர்ப்பக் காலத்திலேயே பெண்கள் தங்கள் பிரசவ முறை குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லா பிரசவ முறைகளிலும் நன்மைகளும் உண்டு உடன் சில பக்கவிளைவுகளும் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற பிரசவ முறையை மருத்துவர் பரிந்துரைக்கும் போது அது குறித்து சரியான முடிவை எடுப்பது உங்கள் கையில் உள்ளது. இப்போது என்ன மாதிரியான பிரசவ முறைகள் (Different Childbirth in Tamil) உண்டு என்பதை பார்க்கலாம்.

வீட்டில் நடக்கும் இயற்கை பிரசவம்

Home Childbirth

இன்றும் எங்கோ ஓர் இடத்தில் இத்தகைய பிரசவம் நடந்துகொண்டுதான் உள்ளது. கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக இம்முறை வழக்கத்தில் உள்ளது. எந்த குறுக்கீடுகள் மற்றும் கண்காணிப்பும் இல்லாமல் ஒரு சிலரின் உதவியோடு இந்த பிரசவம் நடக்கும்.

இந்த பிரசவ முறையில் கர்ப்பிணி பெண் முன் கூட்டியே மூத்தவர்களிடம் பிரசவ நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு தயாராக இருப்பாள்.

கர்ப்பிணி பெண் மூச்சுப்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான மனம் மற்றும் உடலை எப்படி அமைதியாக வைத்துகொள்வது போன்ற பிரசவ நிலைகளை தானாகவே சமாளிக்க கற்றுகொள்வாள். இன்றும் இந்த பிரசவ முறை பல நாடுகளில் வழக்கத்தில் தான் இருக்கிறது. இது அமைதியான பாதுகாப்பான பிரசவம் என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.

இத்தகைய பிரசவ முறையில் சுகப்பிரசம் உண்டாகிறது என்பதோடு தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மேலும் இந்த முறையில் எந்த மருந்துகளும் தேவை இல்லை. ஆனால் இந்த பிரசவம் சிக்கலானதும் கூட. பிரசவத்தில் எதிர்பாராத சிக்கல் உண்டாகும் போது மருத்துவர் அருகில் இருக்க மாட்டார் என்பதால் மருத்துவர்கள் இந்த முறை பிரசவத்தை ஊக்குவிப்பதில்லை.

சுகப்பிரசவம் முறை என்றால் என்ன?

Vaginal delivery

சுகப்பிரசவ முறைத் தாய் சேய் இருவரும் எந்த மருந்துகளின் உதவியும் இன்றி நலமுடன் இருக்க உதவும் முறை ஆகும். இந்த பிரசவத்தால் குழந்தை விரைவாக இயல்பான நிலைக்கு பிரசவத்துக்கு திரும்பிவிடும். பிறப்புறுப்பு வழியாக குழந்தை வெளியேறும் இந்த முறை தான் எல்லா கர்ப்பிணிகளும் வேண்டுகின்றனர். இது மிக குறைந்த ஆபத்தை கொண்டுள்ளது.

Normal Delivery

இத்தகைய கர்ப்பம் கர்ப்பத்தின் 37 மற்றும் 42 வாரங்களுக்கு இடையில் பெரும்பாலும் நிகழ்கிறது. பிறப்புறுப்பு பிரசவம் கூட மூன்று நிலைகளை கொண்டுள்ளது. பிரசவம், பிறப்பு மற்றும் நஞ்சுக்கொடியை பிரசவித்தல் என மூன்று நிலைகளை கொண்டுள்ளது.

சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெறும் பெண்கள் விரைவான மீட்புக்கு ஆளாவார்கள். இது குழந்தைக்கு பாதுகாப்பான பிரசவ முறை. நோய்த்தொற்றிலும் குறைந்த விகிதங்கள் உண்டாகும். குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகள் குறைவாக இருக்கும். வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டிருப்பார்கள். இப்பிரசவம் மூலம் பாலூட்டுதல் மற்றும் தாய்ப்பால் பொதுவாக எளிதாக இருக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும் பிரசவ முறையாகும்.

கர்ப்பத்தின் 40 வாரங்களில் இயற்கையாகவே பிரசவத்துக்கு செல்வது நல்லது. சமயங்களில் பிரசவ வலி வராத நிலையில் மருந்துகள் அல்லது பிற நுட்பங்கள் பயன்படுத்தி பிரசவத்தை தொடங்கி பிரசவம் நடக்க கருப்பை வாயை மென்மையாக்குகின்றன.

இத்தகைய பராமரிப்பில் கர்ப்பிணிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அல்லது கர்ப்ப காலம் முடிந்தும் பிரசவ வலி வராவிட்டால் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் பிரசவ வலி தூண்டும் மருந்துகளை பயன்படுத்தும் சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

சி- பிரிவு பிரசவ முறை என்றால் என்ன?

c section delivery

சி -பிரிவு பிரசவம் என்பது மகப்பேறு மருத்துவர் உங்கள் வயிறு மற்றும் கருப்பையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் உங்கள் குழந்தையை பெற்றெடுக்க செய்வார்.

கர்ப்ப காலத்திலேயே மருத்துவ காரணங்களால் சில பெண்களுக்கு முன் கூட்டியே இந்த சி – பிரிவு பிரசவம் திட்டமிடலாம். சமயங்களில் பிரசவ காலத்தில் சி- பிரிவு தேவைப்படலாம்.

இவை தவிர முந்தைய கர்ப்பகாலம் சி – பிரிவில் முடிந்திருந்தால் பல மடங்கு வாய்ப்பு மீண்டும் சி – பிரிவுக்கு உண்டாகலாம். நஞ்சுக்கொடி பிரிவீயா நிலை, கருவின் மேக்ரோசோமியா, பெரிய குழந்தை, கருப்பை நார்த்திசுக்கட்டி அல்லது பிற அடைப்பு இருக்கும் போது.

சில நேரங்களில் பிரசவ நேரத்தில் பிரசவம் மாறும் போதும், குழந்தை அல்லது தாயின் ஆரோக்கியம் பாதிக்கும் போது இந்த சி – பிரிவு அவசியமாகிறது. சமயங்களில் கட்டுக்கடங்காத நீரிழிவு இரத்த அழுத்தம் இருக்கும் போது இந்நிலை உண்டாகிறது.

பிரசவ காலத்தில் குழந்தை பிறப்பை பொறுத்து கொள்ள முடியாத பெண்களும், தொப்புள் கொடி விரிசல் , நஞ்சுக்கொடி சீர்குலைவு, இரத்தப்போக்கு அல்லது அதிக இரத்தப்போக்கு கொண்டவர்களுக்கும் கூட சி- பிரிவு சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இந்த பிரசவ முறை தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் என்பதை கர்ப்பிணிகள் மற்றும் குடும்பத்தார் புரிந்து கொள்ள வேண்டும்.

VBAC – (VAGINAL BIRTH AFTER CESAREAN ) முறை பிரசவம் என்றால் என்ன?

சில பெண்கள் முதல் கர்ப்பத்தின் போது சிசேரியன் முறையில் பிரசவித்திருந்தால் அடுத்த குழந்தை பிறப்பின் போது சுகப்பிரசவத்தை பெறலாம். இதுவே VBAC – (Vaginal birth after cesarean) என்று அழைக்கப்படுகிறது.

எனினும் இந்த முறை முதல் பிரசவம் சி – பிரிவு முடிந்த உடன் மீண்டும் கருத்தரித்து பிரசவத்துக்கு தயாராகும் போது கருப்பையில் முந்தைய வெட்டு வடு விளைவித்திருக்கும். இதனால் சுகப்பிரசவத்தின் போது பெண் முக்கும் போது யோனி அழுத்தம் உண்டாகி வடுவை விரிசலுக்கு ஆளாக்கலாம்.

இது வேறு வித பாதிப்பை உண்டு செய்து விடலாம். அதனால் சி – பிரிவுக்கு பிறகு சில வருடங்கள் இடைவெளி அவசியம். இல்லையெனில் அடுத்த பிரசவத்தையும் மருத்துவர் சி- பிரிவுக்கே பரிந்துரைப்பார்.

எபிசியோடமி பிரசவ முறை என்றால் என்ன?

பிரசவம் மற்றும் பிரசவத்தின் போது உங்கள் கர்ப்ப பராமரிப்பு மருத்துவர் இந்த எபிசியோடமி குறித்து விவாதித்தால் நீங்கள் இது குறித்து அறிந்திருப்பது நல்லது.

இந்த எபிசியோடமி என்பது உங்கள் யோனியின் திறப்பை விரிவுப்படுத்தும் அறுவை சிகிச்சை ஆகும். இது பிறப்புறுப்பு பகுதியில் ஒரு கீறலை உண்டாக்குவதன் மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தையின் தலையை மிக எளிதாக கடந்து வெளியே கொண்டு வர முடியும். பெரும்பாலானவர்களுக்கு எபிசியோடமி தேவையில்லை.

இந்த எபிசியோடமியில் இரண்டு வகையான கீறல்கள் உள்ளன. நடுக்கோடு நேரடியாக உங்கள் ஆசனவாயை நோக்கி திரும்பி இருக்கும். மற்றொன்று உங்கள் ஆசனவாயிலிருந்து சாய்ந்து செல்லும் நடுப்பகுதியில் இருக்கும். எனினும் பிரசவத்துக்கு பிறகு கீறல் பகுதியை தையல் போட்டு விடுவார்கள் என்பதால் பயம் வேண்டாம்.

அம்னோடோமி முறை பிரசவம் (பனிக்குடத்தை உடைத்து பிரசவம்) என்றால் என்ன?

அம்னோடோமி என்பது குழந்தையை சுற்றியுள்ள திரவத்தை கொண்ட அம்னோடிக் சவ்வுகள் அல்லது பையின் செயற்கையாக முறிவு செய்யும் நிலை. மருத்துவர்கள் உங்கள் சவ்வுகளை செயற்கையாக சிதைப்பார்கள்.

இது பிரசவ உழைப்பை தூண்டவும் அல்லது முன்னேற்றவும் உதவும் மேலும் பிரசவ சுருக்கங்களை மதிப்பிடுவதற்கு உள் மானிட்டர் வைக்கப்படும். குழந்தையின் உச்சந்தலையில் உள் மானிட்டர் வைக்கப்படும். மேலும் மெக்கோனியம் அதாவது (பச்சை கலந்த பழுப்பு நிறப்பொருள், இது உங்கள் குழந்தையின் முதல் மலம்) உள்ளதா என சரிபார்க்கவும்.

இவை எல்லாம் சீராக இருக்கும் நிலையில் மருத்துவர் பனிக்குடத்தை உடைக்க ஒரு கொக்கியை உடைப்பார். பனிக்குடம் உடைந்த உடன் ஆபத்தை தடுக்க செயல்முறையை தடுக்க 24 மணி நேரத்துக்குள் பிரசவம் நடைபெற வேண்டும். கர்ப்பிணிக்கு பிரசவ வலியின் போது பனிக்குடம் உடைவது கூட பிரசவத்தின் அறிகுறியே.

தண்ணீர் பிரசவம் என்றால் என்ன?

Water Birth Delivery

இந்த முறை இன்னும் பிரபலமாகவில்லை. இது குறித்து தற்போது விழிப்புணர்வு கர்ப்பிணிகளுக்கு உண்டாகி வருகிறது. இந்த முறையில் பிரசவம் என்பது வலியை குறைக்க செய்யும். கர்ப்பிணி பெண் அகலமான டப்பில் வெதுவெதுப்பான நீரில் அமர வைக்கப்படுவாள்.

குழந்தை யோனி வழியாக பிரசவிக்கும். பல பெண்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்க காரணம் இது மன அமைதியை அளிப்பதே ஆகும். வெந்நீரில் உடல் மூழ்கும் போது தசை வலி அசெளகரியம் குறையும். அதோடு இவை பிரசவ வலியை வெகுவாக குறைத்துவிடும். தற்போது பெரும்பாலும் இந்த பிரசவ முறைகளை மருத்துவமனைகளே பரிந்துரைக்கின்றன.

லமேஸ் முறை பிரசவம் என்றால் என்ன?

Lamaze Childbirth

இந்த முறையின் பெரிய குறிக்கோள் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியை தாங்க கூடிய போதிய தன்னம்பிக்கையை வழங்குதலே ஆகும். இந்த பயிற்சியில் வலி தாங்கும் நுணுக்கங்களை கற்று கொடுத்து பிரசவ நேரத்தில் அதிக செளகரியத்தோடு இருக்க உதவுகிறது.

பிரசவ நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வதால் அதிகம் அமைதியான மனநிலையை பெற்றுவிடுகின்றனர். இதனால் பிரசவ வலிகள் குறைவதோடு மருந்துகளும் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுவதில்லை. இந்த பயிற்சியை தேர்ந்தெடுத்த மருத்துவர்களால் மட்டுமே அளிக்கப்படும் என்பதால் கர்ப்பகாலத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த பயிற்சியில் கலந்து கொள்வது அவசியம்.

பிராட்லி முறை பிரசவம் என்றால் என்ன?

Bradley Childbirth

இதில் பிராட்லி முறை என்பது பெண் பிரசவத்துக்கு முந்தைய 7 மாதத்துக்கு முன்பே கற்றுத்தரும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சியின் மூலம் 12 வாரங்களுக்கு முன்பே கர்ப்பிணி பெண் எடுத்துகொள்ளும் உணவு முறை, பிரசவ கால பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டு பிரசவத்துக்கு தயார் படுத்துவார்கள்.

ஆனால் இந்த பிரசவ முறையை கர்ப்பிணி பெண்ணே யாருடைய உதவியும் இன்றி தனியாக பிரசவம் செய்து கொள்ளும் முறையாகும். எனினும் இந்த வகை பிரசவங்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை.

வெற்றிட பிரித்தெடுத்தல் பிரசவ முறை

இந்த முறையில் பிறப்பு உறுப்பில் குழந்தை இருக்கும் போது குழந்தையை வெளியேற்ற குழந்தையின் தலையில் மென்மையான கப் வைத்து அதன் பிறகு கையால் பம்ப் செய்யப்பட்டு குழந்தையை வெற்றிடம் உருவாக்கி மெதுவாக வெளியே எடுக்க முயற்சி செய்வார்கள். இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்காது.

அதோடு அறுவை சிகிச்சையின் போது குழந்தை அதிக நேரம் அந்த அழுத்தம் நிறைந்த சூழலில் இருப்பது தவிர்க்கப்படுகிறது. இந்த முறை ஆங்கிலத்தில் (Vacuum Extraction Delivery) என்று அழைக்கப்படுகிறது.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்! 

மேற்கண்ட முறையில் பிரசவங்கள் நடைபெறும் என்றாலும் தவிர்க்க முடியாத ஆபத்தான சூழலில் சி- பிரிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஆரோக்கியமான சூழலில் பிரசவம் என்பது பிறப்புறுப்பு பிரசவமே. இந்த சுகப்பிரசவம் தாய் சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சொல்லலாம்.

5/5 - (204 votes)

பொதுத்துறப்பு

பொதுத்துறப்பு ஜம்மி ஸ்கேன்ஸ் (Jammi Scans) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே. இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது. ஜம்மி ஸ்கேன்ஸ் தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது. ஜம்மி ஸ்கேன்ஸ் உருவாக்கும் (இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம். ******** உங்களின் பாதுகாப்பை எங்களின் முன்னுரிமையாகக் கருதி, குறைந்தபட்ச நபர்களுடன் செல்லுமாறு ஜம்மி ஸ்கேன்ஸ் கேட்டுக்கொள்கிறது. PC-PNDT சட்டத்தின்படி, உங்களுடன் வரும் நபர்கள் ஸ்கேன் அறைக்குள் உங்களுடன் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பானதாக்க இந்த கடினமான காலங்களில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Share This Article
Follow:
டாக்டர். தீப்தி ஜம்மி (இயக்குனர், ஜம்மி ஸ்கேன்கள்) எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்) கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் டாக்டர்.தீப்தி சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் கரு மருத்துவத்தில் தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார், மேலும் பல மதிப்புமிக்க பிராந்திய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியுள்ளார்.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »